தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கடந்த ஜூலை 28ம் தேதி தருமபுரி வழக்கறிஞர் சங்கம் ஒருங்கிணைத்த ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த போராட்டத்தில் பலர் பங்கேற்று, முக்கியமான மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- முதலாவது கோரிக்கையாக, தருமபுரியில் இயங்கி வந்த சிறப்பு மாவட்ட நீதிமன்றம் (SDJ) மற்றும் சிறப்பு சார் நீதிமன்றம் (SSJ) ஆகியவை தற்போது செயல்படாத நிலையில், அவற்றை மீண்டும் தருமபுரியில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
- இரண்டாவது கோரிக்கையாக, போக்கோ நீதிமன்றம் மற்றும் கூடல் சார் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
- மூன்றாவது கோரிக்கையாக, நீதிமன்றத்திற்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், புதிய சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் என்றும் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது. இதில் தருமபுரியின் மூத்த வழக்கறிஞர்கள், இளைய சட்டபயிற்சியாளர்கள் என பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
.gif)

.jpg)