தருமபுரி, ஜூன் 9:
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“மீன்வள விவசாயிகள் மீன்வளர்ப்புத் தொழிலை தொடர்ச்சியாகச் செயலில் வைத்திருக்க, மற்றும் மீன்குஞ்சுகள் கொள்முதல் செலவினத்தை குறைக்க அதிகபட்சம் 1 ஹெக்டேருக்கு ரூ.5000/- மானியம் வழங்கப்படும். இதன் மூலம் மீன் உற்பத்தி விகிதம் அதிகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.”
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இந்த மானியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய விவரங்கள்:
-
1 ஹெக்டேருக்கு அதிகபட்சம் 10,000 மீன்குஞ்சுகள்
-
ஒரு பண்ணைக்கான மானியம்: ரூ.5,000/-
-
பயனடைவர்: மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன்வள விவசாயிகள்
மேலும், இத்திட்டம் குறித்து மேலும் விளக்கம் பெற விரும்பும் மீன்வள விவசாயிகள், தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் வந்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
.gif)

