Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி பேரூராட்சி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா முன்னிலை வகித்தார், புது பானையில் பொங்கல் வைத்து, பொங்கலோ, பொங்கல் என்று ஆரவாரம் முழங்க செங்கரும்புடன் மஞ்சள் வைத்து சூரிய பகவானுக்கு   நன்றி தெரிவித்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டார். இறுதியில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies