தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் ரோடு பின்புறம் வசித்து வருபவர் சித்ரா இவரது 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி மாணவியின் தாய் இன்று பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செயது காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
.gif)

.jpeg)