மே 1 உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பென்னாகரம் ஒன்றியத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.சுமார் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் CPI-M கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கலப்பம்பாடி ஒன்றிய கவுன்சிலர் சக்ரவேல் , வட்ட இடைக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக