Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே 75 ஆண்டுகளுக்கு பிறகு மலை கிராமத்திற்க்கு சாலை பணிக்கு மத்திய அரசு அனுமதி, தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் தகவல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சியில் உள்ள கோட்டுர் மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை போதிய சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி 4 கி.மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்  அவல நிலை இருந்து வருகிறது. 

இந்நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், தீவிர முயற்சி மேற்கொண்டு மத்திய வனத்துறை, சுற்றுசூழல் துறை, பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட 6 துறைகளின் அனுமதி பெற்று மலை அடிவாரத்தில் இருந்து கோட்டூர் மலைமுகடு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்  அகன்ற சாலை அமைக்க  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து கோட்டுர் மலை கிராம மக்களை சந்தித்து அனுமதி கிடைத்த விவரத்தையும் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.


முன்னதாக கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் மேளதாளம் முழங்க பூர்ணகும்ப மரியாதை அளித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வட்டுவன ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், மடம் முருகேசன், சபரி, மேற்கு மாவட்ட இளைஞர் அணி மகேஷ்குமார், கவுன்சிலர் முத்துசாமி மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies