தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (20.03.2023) தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி நீர்த்தேக்க ஆயக்கட்டுதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2184 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் இன்று (20.03.2023) முதல் 35 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 2022-2023 ஆம் ஆண்டில் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 20.81 மில்லியன் கனஅடி தண்ணீர் வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும் முறைவைத்து பாசனத்திற்கு மொத்தம் 89.30 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தில் 791.57 ஏக்கர், நாகனம்பட்டி கிராமத்தில் 622.00 ஏக்கர், கெரகோடஅள்ளி கிராமத்தில் 654.80 ஏக்கர், காரிமங்கலத்தில் 88.80 ஏக்கர், அடிலம் கிராமத்தில் 26.62 ஏக்கர் என மொத்தம் 2184.00 ஏக்கர் நிலப்பரப்புகள் பாசன வசதி பெறுகின்றன. அறிவிக்கப்பட்ட நான்கு நணைப்புக்கு பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட மாட்டாது. எனவே விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் திரு.பாபு, உதவிப் பொறியாளர்கள் திருமதி. மோகனப்பிரியா, திருமதி. மாலதி, காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.சுகுமார், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கலைவாணி, பொம்ம அள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.தீர்த்தகிரி, விவசாய சங்க பிரதிநிதிகள் திரு.கோவிந்தராஜ், திரு.ராஜா, திரு.மணி, திரு.முருகன் உள்ளிட்ட விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக