பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி சேக்கோ ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி சேக்கோ ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.

 


பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி சேக்கோ ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள வரலட்சுமி கிழங்கு மக்காச்சோளம் அரவை ஆலை பீனி ஆற்றின் கரையை ஒட்டி பெரிய குளம் அமைத்து, ஆற்றிலிருந்து  தண்ணீரை எடுத்து சேமித்து வைத்துள்ளதாகவும், அந்த நீர் மூலம் ஆலையை இயக்கி வெளியேறும் ரசாயன கழிவுகள் முழுவதும் நேரடியாக ஆற்றில் கலந்து மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்து, இதனை கண்டிக்கும் வகையில் பீணி ஆறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையிலான விவசாயிகள் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ரசாயனம் கலந்த நீரை வாட்டர் பாட்டில் மூலம் கையில் வைத்துக்கொண்டு பதவிகளை ஏந்தி கோசமிட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக விவசாயி பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி : வரலட்சுமி சேகோ ஆலை கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக அனுமதியின்றி விவசாய நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக ஐந்து ஏக்கர் பரப்பளவில்  குளத்தை வெட்டி பீனி ஆற்றின் வழியாக செல்லும் நீரை ஆலைக்காக கொண்டு செல்கின்றனர், ஆலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை, பசுமை வளையம் அமைக்கவில்லை, விவசாய நிலங்கள் அனைத்தும் பாழாகிவிட்டதாகவும், இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து குடிநீர் ஆதாரங்களும் விஷம் ஆகிவிட்டதாகவும், இது சம்பந்தமாக கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கவில்லை. இதனால் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகிவிட்டது எனவே தமிழக அரசு உடனடியாக இந்த வரலட்சுமி சேகோ ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என தெரிவித்தார். 


மேலும் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் என்ற வகையில் எல்லோரும் அடங்கி விட்டதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அந்த விலையையொட்டி கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் 30 ஆண்டு கோரிக்கை எனவும் தொடர்ச்சியாக வரக்கூடிய அனைத்து அரசுகளும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதாகவும் தேர்தல் முடிந்த பின்பு மறந்து விடுவதாக உள்ளது. மாநில அரசாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு எம் எஸ் பி குறைந்தபட்ச ஆதார விலையை உற்பத்தி செலவோடு 50% கூடுதலாக சேர்த்து எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும், கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும், மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைத்தரவுகள் கொள்ளை அடித்து வருகின்றனர், இந்த கொள்ளையை ஒழித்து விவசாயிகளுக்கு கூடுதல் விலையை கொடுத்து மக்களுக்கு குறைந்த விலையை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்து விற்க வேண்டும் என்பதுதான் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் கொள்கையாக உள்ளது. இதை நிறைவேற்ற கோரி விவசாயிகள் பெரும் போராட்டமாக உள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad