பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் கீழ் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு 20,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது, இதில் தேக்கு, செம்மரம், மலைவேம்பு, மகாகனி, ரோஸ் வுட் ஆகிய மரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட தயார் நிலையில் உள்ளது, வரப்பு நடவு முறையில் ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு 320 எண்கள் வழங்கப்படும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரங்கள் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு ஆயிரம் எண் மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இந்த மரக்கன்றுகள் நவம்பர் டிசம்பர் மாத பருவ மழையை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம், மேலும் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் , மேலும் தொடர்புக்கு அ. பள்ளிப்பட்டியில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக