ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எம்.புகழேந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் என்.மனோகரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி கோரிக்கைகள் விளக்கி பேசினார்கள். ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட தலைவர் எம்.மாதேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சுதர்சனன், கண்டன உரையாற்றினார்.

ஆர்பாட்டத்தில் உள்ளாட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிளாளர்கள், ஓஎச்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்களுக்கு குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும். உள்ளட்சி அமைப்புகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் மற்றும் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்.குடிநீர் தொட்டி சுத்தம் செய்பவர்களுக்கான ஊதியத்தை உடனே வழங்கவேண்டும்.
உள்ளாட்சி, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு பணி பதிவேடு போர்க்கால அப்படையில் பதிவு செய்ய வேண்டும்.7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு 20.5.2022-ல் அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி தீர்மானம் மற்றும் இணையதள பதிவேற்றம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் முருகன் நிர்வாகிகள் ஏ.முருகேசன், ஏ.மாதேஸ்வரன், முருகன், ரமேஷ், மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக