அரசு பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து 22பேர் காயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

அரசு பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து 22பேர் காயம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே  அரூர் to சேலம் மெயின் ரோட்டில் தண்ணீர் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் காளிப்பேட்டையில் இருந்து பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றுக் கொண்டு வந்து இறக்கி விட்டுகொண்டிருந்த போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அதன் ஓட்டுனர் பொன்மலை 40 நிறுத்தி இருந்த அரசு பேருந்து பின்பக்கத்தில் மோதியதில் 19 பள்ளி மாணவ மாணவிகள் 3 பொதுமக்கள் உட்பட 22 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
தகவல் அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலத்திற்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் காயம் பட்டவர்களை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினார் ஒரு மாணவனுக்கு மட்டும் தலை மற்றும் கையில் பலத்த அடிபட்டதால் அரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், மேலும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad