இரசாயனம் கலந்த செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மனிதனின் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மண்ணின் வளமும் கெடுகிறது. இயற்கை உரம் என்பது மண்ணூட்ட பொருளாக பயன்படுத்தப்படும் உயிரினங்களில் இருந்து கிடைக்கும் பொருள்களை குறிக்கும். இயற்கை உரம் இடுவதால் செடிகளுக்கு தேவையான சத்து கிடைப்பதுடன், மண்ணின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும்.

ஆடு மாடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. இயற்கை உரங்களினால் சாகுபடி செலவு குறைகிறது, நிகர லாபம் அதிகமாகிறது. மண்வளம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு மேன்மை ஆகிறது. இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்தினால் விளை நிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. பயிர்கள் இயல்பாகவே பூச்சி நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன. இதனால் இரசாயன பூச்சி மற்றும் நோய் மருந்துகளை தெளிப்பதை குறைக்கவும் படிப்படியாக விட்டு விடவும் செய்யலாம். மண்ணின் கட்டமைப்பு கடினமாகாததால் பயிர்கள் சத்துக்களை எளிதாக எடுத்துக் கொள்கின்றன.
சீரான பயிர் வளர்ச்சியும், தரமான விளைச்சலும் கிடைக்கும் சுற்றுப்புற சூழல் தூய்மையாகிறது இயற்கை உரங்களால் விஷமில்லா பயிர்கள் கிடைக்கின்றன அவற்றை உண்பதால் ஆரோக்கியமான சந்ததி உருவாகிறது இயற்கை உரங்களை விவசாயிகளே தயாரித்து கொள்வதால் பிற செலவினம் குறைகிறது. இதைப்பற்றி பள்ளியின் தாளாளர் திருஞானசம்பந்தம் வழிகாட்டுதலோடு, ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக