தாதனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கான முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

தாதனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கான முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட   தாதனூர் ஊராட்சி தாதனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கான முகாம் நடைபெற்றது தாதனூர் பகுதியைச் சேர்ந்த 1000 மேற்பட்ட கால்நடைகள் இம்ம முகாமில் கலந்து கொண்டன மற்றும் இதில் சிறந்த கால்நடைக்கான பரிசும் வழங்கப்பட்டன கால்நடைக்கான நோய் எதிர்ப்பு திறன் விழிப்புணர்வுகளையும் மற்றும் கால்நடைக்கு வரக்கூடிய நோய்களைப் பற்றியும் மக்களிடம் கருத்துரையாடினார்கள் இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமிதா ஆதிமூலம் அவர்கள் தலைமையேற்று முகாமை துவங்கி வைத்தார்.



முகாமில் கால்நடை இயக்குனர் ஜி  ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது முகாமில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவர் சக்திவேல் ராமியநல்லி மருத்துவர் சரவணன் ராஜன் மருத்துவர் கோவிந்தராஜ் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து மற்றும் விழிப்புணர்வு மக்களிடம் தெளிவுபடுத்தினார்கள் கால்நடை மருத்துவர்கள் செயற்கை கருவுற்றுதல் மற்றும் மலடு நீக்கம் போன்ற மற்றும் அம்மை நோய்க்கு சிகிச்சை போன்றவை இந்த முகாமில் கையாளப்பட்டன சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad