தருமபுரி மாவட்டம், ஜூன் 17:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கூத்தப்பாடி ஊராட்சி, ஊட்டமலை மஞ்சகாய்கொடம்பு பகுதியில், பழங்குடியினருக்கான வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரூ.11.46 லட்சம் மதிப்பில், இருளர் சமூகத்தை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு கட்டப்படும் வீடுகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்துடன், அப்பகுதியிலுள்ள அனைத்து குழந்தைகளும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்தல் குறித்து அவர் உறுதியாக ஆலோசனை வழங்கினார். மேலும், குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஊராட்சி வழங்கும் குடிநீரை தனி பிரிவாக வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர், மஞ்சகாய்கொடம்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் சிறிய அளவிலான மையத்தையும் பார்வையிட்ட கலெக்டர், உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
இருப்பது மட்டும் அல்லாமல், பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா மையத்தையும் ஆய்வு செய்த கலெக்டர், தொங்கு பாலம், பரிசல் நிறுத்துமிடம், உடைமாற்றும் அறைகள், உணவகங்கள், நுழைவு சீட்டு வழங்கும் மையம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சுத்தமாகவும் பிளாஸ்டிக் விடுபட்ட முறையிலும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில், பென்னாகரம் வட்டாட்சியர் திரு. பிரசன்னா மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. லோகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) திரு. பா. கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக