பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க.வின் உணவு வழங்கும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க.வின் உணவு வழங்கும் விழா.


பாலக்கோடு, மே 28:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலும், பேரூராட்சி செயலாளர் விக்னேஷ் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியை முன்னெடுக்க ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து, பாலக்கோட்டிலும் இந்த சேவை நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் விஜயகுமார், துணை செயலாளர் சின்னதுரை, செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தமிழரசன், தொண்டரணி அமைப்பாளர் அருள், துணை அமைப்பாளர் சபரி, பொருளாளர் கணேஷ்பாபு, மாணவர் அணி அமைப்பாளர் பிரபு, விவசாயி அணி அமைப்பாளர் வசந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உதவிப் பணிகளில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad