கிட்டம்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா: தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

கிட்டம்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா: தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.


பாலக்கோடு, மே 28-


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலில் வருடாந்த திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இவ்விழா கடந்த திங்கட்கிழமை கங்கை பூஜையுடன் தொடங்கப்பட்டு, அன்றே காப்பு கட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று திருவிழாவின் முக்கிய நாளாக இருந்த நிலையில், அதிகாலை முதல் அம்மன் மற்றும் ஸ்ரீ சக்திவிநாயகர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பக்தர்கள் மாவிளக்கு, தீ சட்டி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, காளி, சிவன், கருப்பசாமி போன்ற வேடங்களில் பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.


அதையடுத்து, கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து ஆனந்தம் பெற்றனர். திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad