அமானிமல்லபுரத்தில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் வெற்றி யாத்திரை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

அமானிமல்லபுரத்தில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் வெற்றி யாத்திரை.


பாலக்கோடு, மே 28-


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லபுரத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜகவினர் வெற்றி யாத்திரை ஒன்றை நடத்தினர். பாலக்கோடு கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் பி.கே.சிவா, நெசவாளர் அணி முன்னாள் மாநில செயலாளர் சண்முகம், கிழக்கு ஒன்றிய தலைவர் பசுபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


பாரத மாதா கோயில் அருகிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், அமானிமல்லபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது. இதில் மூவர்ணக் கொடி ஏந்திய பாஜக தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை கொண்டாடினர்.


மத்திய அரசு பிரிவு ஒன்றிய தலைவர் பச்சியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், விஸ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் சரவணன், பாஜகவினர் சிவா, பிரேம்குமார், ஸ்ரீகாந்த், மாதப்பன், பிரபு, யுவராஜ், அருள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad