
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" இல் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றியாத்திரை ஊர்வலம் நடை பெற்றது. பாலக்கோடு நகர தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் பி.கே.சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் குணா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வெற்றி யாத்திரையை தொடங்கி வைத்தனர். தக்காளி மண்டியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. இதில் பாஜகவினர் மூவர்ணக் கொடியை ஏந்தி, நாட்டுப்பற்றை உணர்த்தும் கோஷங்களுடன் ஊர்வலமாக பயணித்தனர்.
மேலும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு பூமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மீனவர் அணி மாவட்ட தலைவர் மாதையன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, ஒன்றிய செயலாளர்கள் பசுபதி, மணிவண்ணன், முனியப்பன், சாமுவேல், நகர பொது செயலாளர்கள் தண்டபாணி, ஜெய்கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக