.jpg)
மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுசெய்துள்ள மீன் பண்ணைகளை வைத்துள்ள விவசாயிகள் இந்த உதவித்திட்டத்தின் பயனாளிகளாக இருக்கலாம். குறைந்த செலவில் மீன் உற்பத்தியை அதிகரிக்க, ஒரு ஹெக்டேருக்கு 10,000 எண்ணம் மீன்குஞ்சுகளை வாங்க ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை, 2025ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்த மானியக் கோரிக்கையின் ஒரு பகுதியாகும். திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற, ஒட்டப்பட்டி பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக நாட்களில் நேரில் தொடர்புகொண்டு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு விவசாயிகள் அதிக பயன் அடைவதோடு, மீன் உற்பத்தியில் முன்னேற்றமும் ஏற்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக