பாலக்கோடு, மே 29:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தில், விவசாயி கணேசன் என்பவரின் காளை மாடு 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமான நிலையில் சிக்கிக்கொண்டது.
மேய்ச்சலுக்காக நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு, அப்பகுதியில் இருந்த திறந்த நிலக்கிணற்றில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த விவசாயி கணேசன், கிணற்றில் காளை மாடு சிக்கி தவிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் வழங்கினார்.
தகவல் கிடைத்தவுடன், பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செயல்பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர், பாதுகாப்பான முறையில் கிணற்றில் இறங்கி, காளை மாட்டை உயிருடன் மீட்டு வெளியே எடுத்து விவசாயி கணேசனிடம் ஒப்படைத்தனர். விவசாயி மற்றும் கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக