தருமபுரியில் கலைஞர் கைவினைத்திட்டத்தின் கீழ் 25% மானியத்துடன் கடனுதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

தருமபுரியில் கலைஞர் கைவினைத்திட்டத்தின் கீழ் 25% மானியத்துடன் கடனுதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, மே 29-

தருமபுரி மாவட்டத்தில் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் “கலைஞர் கைவினைத்திட்டத்தின்” கீழ், 25% மூலதன மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்தின் மூலம், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், தோல் பொருட்கள், நகை தயாரித்தல், துணி நெய்தல், சுதை வேலை, சிகையலங்காரம், மூங்கில், பனை ஓலை மற்றும் மண்பாண்டங்கள் உள்ளிட்ட 25 வகையான கைவினைத் தொழில்களுக்கான பயிற்சி, தொழில்நுட்ப கருவிகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவுடன் ரூ.3 லட்சம் வரையிலான பிணையமில்லா கடன் வழங்கப்படும். இதில், ரூ.50,000 வரை 25% மானியமாகவும், 5% வட்டி மானியமாகவும் பெற வாய்ப்பு உள்ளது.


விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்தத் தொழிலில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். புகைப்படம், ஆதார் அட்டை, தொழில் அனுபவ சான்றிதழ் மற்றும் திட்ட அறிக்கை போன்ற ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட தொழில் மையத்தை நேரில் அல்லது 8925533941, 8925533942 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad