இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை,உதவி பேராசிரியர் முனைவர் பூபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். இவர் தனது உரையில் அமெரிக்க இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியை பற்றின அறிமுகத்தையும், இந்த இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பல்வேறு எழுத்தாளர்களைப் பற்றியும், அந்நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள சமூக விழுமியங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாணாக்கர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து ஆங்கிலத்துறை தலைவரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் துவக்கவுரையாற்ற, முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக முதலாம் ஆண்டு மாணவி காவியா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். ஆராய்ச்சி மாணவி நந்தினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைக்க, இறுதியாக செல்வி ஹாஜிரா நன்றி உரை வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோகுல் அன்புச்செல்வன் விஜய் ஸ்ரீ கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.

