Type Here to Get Search Results !

தாளநத்தம் நடுநிலைப் பள்ளியில் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.


கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 170 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றன நேற்று விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் லட்சுமணன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா இனிப்பு வழங்கி கொண்டாடினார்.


இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் மனோகரன் வரவேற்றார், ஒன்றிய துணை அமைப்பாளர் மாயவன்.மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய பின்பு அரசு பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று  அதற்கு உறுதுணையாக பள்ளிக்கும் நமது கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். 


இன்று இந்தியாவிற்கே வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் கல்வி கற்று உயர்ந்து இந்திய அரசியலமைப்பு நமக்கு வகுத்துக் கொடுத்தால் அதுபோல அவர் வழித்தோண்டலாக எழுச்சித்தமிழர் திருமாவளவன்  மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார் அவரைபோல் கல்வி கற்று உயர வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர் .இந்த நிகழ்வில் பள்ளி கணித ஆசிரியர் மாதையன். ஹேமாவதி. ராமலிங்கம்  ராமச்சந்திரன் ஷீலா . தேன்மொழி இளம் தேடி கல்வி பணியாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies