அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்சோ, போதை பொருள் விழிப்புணர்வு தலைக்கவசம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூன், 2023

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்சோ, போதை பொருள் விழிப்புணர்வு தலைக்கவசம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..


போதை விழிப்புணர்வு போக்சோ மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் அரூர் காவல்துறை உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் போக்சோ விழிப்புணர்வு /போதை பொருள் விழிப்புணர்வு தலைக்கவசம் பற்றி விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக நல்ல அறிவுரைகளை வழங்கி 18 வயது முடியாதவர்கள் இருசக்கர வாகனம் லைசென்ஸ் இல்லாமல் ஒட்டக்கூடாது என்பதை பற்றி மிகச் சிறப்பாக விழிப்புணர்வு வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி துரை மாணவர்களுக்கு ஒழுக்கம் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர் வழங்கினார் விழாவில் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் சங்கர் முருகேசன் மற்றும் கல்பனா, சரவணன், மூர்த்தி, கலைவாணன் ஆசிரியர்கள  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad