ஏரியூர் மற்றும் பாப்பாரப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம் 24ம் நீதி நடைபெறவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூன், 2023

ஏரியூர் மற்றும் பாப்பாரப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம் 24ம் நீதி நடைபெறவுள்ளது.


பென்னாகரம் தொகுதியில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு சுப்ரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளி வளாகங்களில் நாளை (24.6.2023 சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் அரசின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 

இம்முகாம்களில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனை, பல ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து இருதய  நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வகை சிறப்பு மருத்துவர்கள் செவிலியர்கள் மேலும் பலர் சிகிச்சையளிக்க உள்ளனர். பொதுமக்கள் வருகை தந்து உரிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.


இம்முகாம்களில் இருதய நோய் ECG, ECHO பரிசோதனை, பொதுநல மருத்துவம், பெண்கள்,குழந்தைகள் மருத்துவம், நுரையீரல், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, பல், தோல், புற்று நோய் பரிசோதனை, சித்த மருத்துவம், மன நல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு மருத்துவர்களும் பங்கேற்று சிறப்பு மருத்துவ சிகிச்சையளிக்க உள்ளனர். தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad