நரிப்பள்ளி தொழிலதிபரின் 60வது மணிவிழா திருக்கடையூர் கோயிலில் சிறப்பு அபிஷேகம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

நரிப்பள்ளி தொழிலதிபரின் 60வது மணிவிழா திருக்கடையூர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.


தருமபுரி மாவட்டம் நரிப்பள்ளியை சேர்ந்தவர் ஆ.சிற்றரசு இவர் மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணை செயலாளராக உள்ளார் இவரது மனைவி வாசுகிசிற்றரசு இவர் நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார் இவர்களுக்கு இன்று 60வது மணி விழாவை முன்னிட்டு தனது குடும்பத்தோடு  திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடையிஸ்வரர் அபிராமியம்மாள் திருக்கோயிலில் சாமிதரிசனம் செய்தனர்.


முன்னதாக கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கோயிலில்  ஆ.சிற்றரசு வாசுகி ஆகியோருக்கு கோயிலின் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர் இதில் அவரது குடும்பத்தினர் மருத்துவர் சி.பாலசந்தர், சத்யநாராயணாஜீவிதா, ராஜீஅபிராமி. சபரீஸ்வரன்பவித்ரா. ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அங்குள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad