Type Here to Get Search Results !

பயணிகளின் பயன்பாட்டிற்காக நிழற்கூடத்தை திறந்து வைத்தார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற் கூடத்தை திறந்து வைத்தார்  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி.


மலை கிராமங்களையும், கிராமப்பகுதிகளையும் அதிகம் கொண்ட பகுதியாக பாப்பாரப்பட்டி இருந்து வருகிறது, பல்வேறு தேவைகளுக்காக தினசரி ஆயிரக்கணக்கானோர் இப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் சிரமப்பட்டு வந்தனர், இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பத்து லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி  உடனடியாக புதிய பயணியர் நிழற் கூட்டத்தை கட்டி முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருப்பது கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.


இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பிருந்தா முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி நன்றி உரை வழங்கினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி தலைவர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies