பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அதிவிரைவு ரத்தப் பரிசோதனை மையம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 மார்ச், 2023

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அதிவிரைவு ரத்தப் பரிசோதனை மையம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி திறந்து வைத்தார்.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அதிவிரைவு ரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு காயகல்ப திட்டத்தின் கீழ் பென்னாகரம் அரசு மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ50 லட்சம் காசோலை மற்றும் விருது வழங்கப்பட் டது. இப்பணத்தில் ரூ.10 லட்சம் மதிப் பீட்டில் தமிழ்நாட்டில் முதல்முறையாக விபத்து அவசர பிரிவு மற்றும் பிரசவ நோயாளிகளுக்கு அவர்கள் இடத்திலேயே ரத்த பரிசோதனை செய்யும் வகையில் அதிவிரைவு ரத்தப் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு இருபது வினாடிகளில் ரத்த பரிசோதனை முடிவுகள் உடனடியாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசந்திரபாபு  டாக்டர் கனிமொழி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை  சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.


நிகழ்ச்சியில் பாமக மாநில துணை தலைவர் பாடி செல்வம்,பாமக பொதுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட தலைவர் செல்வகுமார்,  மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி நகர தலைவர் ஜீவா, செயலாளர் சந்தோஷ், மற்றும் டாக்டர்கள், மருத்துவ துறை  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad