மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுத் திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 மார்ச், 2023

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுத் திருவிழா.


மருதம் நெல்லி கல்விக் குழுமம், நல்லானூர், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.  நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி வரவேற்புரை ஆற்றினார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். 


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் கிள்ளிவளவன் சிறப்புரை வழங்கினார், அவர் பேசுகையில் "மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்களின் சாதனைகள் அமைய வேண்டும். படிக்கின்ற காலத்தில் நல்ல படைப்பாளனாக உருவாக வேண்டும்.  போட்டி நிறைந்த காலத்தில் அறிவார்ந்த செயலில் ஈடுபட வேண்டும். போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் நன்கு தயாராக வேண்டும் என்று கூறினார்."


நிகழ்வில் பல்கலைக் கழக அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தில் சிறப்பாக சேவை செய்த மாணவர்களுக்கு சாதனை மாணவர்கள் என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.