பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட சார்பாக 7 நாள் சிறப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 மார்ச், 2023

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட சார்பாக 7 நாள் சிறப்பு முகாம்.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திரு கோவிந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

தனது உரையில் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்வோம் எனவும் தானும் கல்லூரி காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவனாக இருந்து பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு இருக்கிறேன் என்பதையும் எடுத்துரைத்து சிறப்பாக பணியாற்றி வரக்கூடிய மாணாக்கர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.‌ தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் வாசிக்கப்பட்டது.  


தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நேரு யுகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரையை வழங்கினார். நிறைவாக பள்ளி வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. 


முன்னதாக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்ற விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார். இறுதியாக செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் தலைவர் காமராஜ் நன்றி உரையாற்றினார்.‌

கருத்துகள் இல்லை:

Post Top Ad