'வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்தல்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 மார்ச், 2023

'வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்தல்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில்  செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக 'வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்தல்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு  நடைபெற்றது. 

இதில் சேலம், பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர். எஸ். பூபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் மென்  திறன்களை மேம்படுத்துதல், சுய அறிமுகத்தை சிறப்பாக செய்தல், கவனிக்கத்தக்க வகையிலான சுய விபரக் குறிப்புகளை தயார் செய்தல் போன்றவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.‌ 


ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர்.  மோகனசுந்தரம் தலைமை வகிக்க,  ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். கோவிந்தராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவி ஆர்ச்சா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.  முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் முதலாம் ஆண்டு மாணவன் ஹரி கிருஷ்ணன் வரவேற்றார். இறுதியாக தாமரைச்செல்வன் நன்றி உரை வழங்கினார். 


இந்நிகழ்வை செல்வன் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வை மாலதி ஜனனி மற்றும் ஆராய்ச்சி மாணவி நந்தினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad