கல்லூரி முதல்வர் மகேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் இரா. செந்தில் கலந்து கொண்டார். சிட்டுக்குருவிகள் தினத்தில் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பதும் பாதுகாப்பதும் அவசியம். சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் அழிந்து வரும் சூழலில் அதனை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகளை உருவாக்கி கல்லூரி வளாகம் மாணவர்களின் இல்லங்களில் வைத்து பறவைகள் வாழ்வதற்கான வாழிடங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் செய்துள்ளார்கள்.
இயற்கை சார்ந்து இயற்கையை பாதுகாக்கும் நோக்கோடு நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் விழிப்புணர்வும் இந்நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மா. பழனி, பசுமை ஆசிரியர் சங்கர், பறவை ஆர்வலர் லோகநாதன் ஆசிரியர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக