தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் தருமம் அறக்கட்டளை பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை இணைந்து நம்மாழ்வார் விருது விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 110 நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

இதில் தருமபுரி மாவட்டத்தில் பனை விதைகள் மற்றும் மரம் நடுதல் செய்தமைக்கு நம்மாழ்வார் விருது 2022 வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மற்றும் மருதம் நெல்லி கல்வி குழுமத் தலைவர் முனைவர்.கோவிந்த், பசுமை நாயகன் ஆசிரியர் சங்கர், தருமம் அறக்கட்டளை சின்னமுத்து ஆகியோர் விருதினை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக