தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இதில் மாதாந்திர பராமரிப்பு பனி மாதமாதம் நடந்து கொண்டிருக்கிறது அப்படி நடைபெற்றாலும் புலிக்கரை பகுதிக்கு லைன் மேன் சரியாக வேலையை செய்வதில்லை ஏனென்றால் இந்த லைன் மரத்தில் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது.

இருப்பினும் மழைக் காலங்களில் இரவு முழுவதும் மின்சாரம் வருவதில்லை காரணம் இதன் வழியே செல்லும் மின் கம்பிகள் மரத்தில் மோதியும் உள்ளேயும் செல்கிறது, மழை காலங்களில் மின் அபாயம் ஏற்படும் ஆபத்து உள்ளது, பராமரிப்பு பணி சரியாக செய்யாத லைன் மேனையும் மற்றும் அதனை கண்டு கொள்ளாத உயர் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக