தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் தருமம் அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை இணைந்து நம்மாழ்வார் விருது 2022 விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 110 அமைப்பினருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

இதில் தருமபுரி மாவட்டத்தில் பனை விதைகள், விதைப்பந்துகள் விதைத்து வரும் மை தருமபுரி இயற்கை தேசம் அமைப்பிற்கு நம்மாழ்வார் விருது 2022 வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேஸ்வரன், மருதம் நெல்லி குழுமத் தலைவர் முனைவர்.கோவிந்த், பசுமை நாயகன் ஆசிரியர் சங்கர், தருமம் அறக்கட்டளை சின்னமுத்து ஆகியோர் விருதினை வழங்கினார்கள்.
மை தருமபுரி இயற்கை தேசம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மத் ஜாபர், முனைவர் மை தருமபுரி சதீஸ் குமார், சமூக சேவகர் தமிழ்செல்வன், ஜனனி சத்தியநாதன், தகடூர் தங்கத் தாரகை தாரணி, சந்திரசேகர் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக