ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலைவிரும்பி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மாணிக்கம்,மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவன், முன்னிலை வகித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமிஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம், திரு ஆரூரான் சுகர்ஸ் (சர்க்கலை ஆலை) நிர்வாகம் கடந்த 2014 முதல் விவசாயிகளிடம் கரும்புகளை பெற்று, விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகையையும், மத்திய மாநில அரசுகள் அறிவித்த ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

திரு.ஆரூரான் சர்க்கரை ஆலையை அறிவித்தபடி அரசே ஏற்று நடத்திட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் வட்டியுடன் ஒரே தவணையாக வழங்கிட வேண்டும்.வங்கி கடன்களிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்.தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4000 என விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் பெற்ற கரும்புக்குரிய நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தமிழ்நாடு முழுவதும் கொடுக்காமல் நிலுவையில் உள்ள சுமார் ரூ 1000 கோடி-யை உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலி மற்றும் வண்டி வாடகை ஆலை நிர்வாகமே ஏற்றிட வேண்டும்.
கழிவுக்காக பிடித்தம் செய்து வைத்துள்ள தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாலக்கோடு வட்டார செயலாளர்கள் மாதப்பன்,பாப்பாரப்பட்டி பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பென்னாகரம் வட்டார தலைவர் முனுராஜ், துணைத் தலைவர் சின்னசாமி, வட்டார செயலாளர்கள் இண்டூர் சின்னராஜ், பாப்பாரப்பட்டி செல்வம், பொருளாளர் ராஜா, நிர்வாகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக