தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை துணை மின் நிலையத்தில் கணக்கு உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பெண் ஊழியர் போர்ஷியா (வயது.45) கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் சக ஊழியர் முன்பு இவரை உயரதிகாரிகள் தகாத வார்த்தையிலும், ஒருமையிலும் பேசுவது மட்டுமின்றி பணி சுமையை அதிகரித்து வந்துள்ளனர்.

இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த பெண் ஊழியர் இது சம்மந்தமாக செயற்பொறியாளருக்கு கடிதம் கொடுத்தும் சம்மந்தபட்டவர்கள் தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததால் விரக்தியடைந்த பெண்ஊழியர், அலுவலகத்தில் உயரதிகாரிகளின் முன்பு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார், தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்தவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்ததுள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக