தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி, தேவாலயத்தின் சிறப்பு வழிபாட்டில் கலந்து வழிபாடு செய்து, கொண்டாடி மகிழும் வாழ்வின் உயரிய திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழா மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான் கண்ணீருடன் விதைப்பபவன், மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வான்.

பகைவனிடம் அன்பு காட்டுங்கள், உங்களை சபிப்பவர்களை வாழ்த்துங்கள், உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள் பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப்போல கபடமில்லாமலும் இருங்கள். ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான், தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான், தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காக திறக்கப்படும். அனைவரிடத்திலும் அன்பு, கருணை, எளிமை, உண்மை, சேவை, மனித நேயம், சகோதர நல்லிணக்கம் போன்றஉயரிய பண்பு நெறியுடன் வாழும் தங்களை போற்றுகின்றேன்.
நாட்டு மக்களுக்கு நன்னெறியை போதித்து, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, கல்விச் சேவையிலும் அரிய மருத்துவச் சேவையிலும் தங்களை அர்ப்பணித்து வாழும் கிறிஸ்தவ பெருமக்களின் அரும்பணிகள் புனிதமானது, மகத்தானது. இயேசு பிரானின் அவதாரத் திருநாளான கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடி மகிழும் நாள் டிசம்பர் 25, அதேபோல் 2022 க்கு விடைகொடுத்து 2023ஐ வரவேற்கும் புத்தாண்டு நாள் முதல் தங்கள் பணி சிறக்க, வாழ்வில் மகிழ்வும் மனநிறைவும் பொங்க, வளமும் புகழும் பெருகி, ஆரோக்கியமுடன் வாழ இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன், என ஜி.கே.மணி அவர்கள் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக