தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு விழா; திமுக பொதுக்கூட்டம் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு விழா; திமுக பொதுக்கூட்டம் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு.


தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு விழா திமுக பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் காரிமங்கலத்தில் நேற்று மாலை பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன் தலைமை வகித்தார். காரிமங்கலம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். அவைத்தலைவர் மனோகரன், துணை செயலாளர் மணி, பேரூராட்சி தலைவர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் ராஜகுமாரி, கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கோபால்,  வேடம்மாள், மாவட்ட பொருளாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,  திமுக பொதுச்செயலாளராக இருந்த, மறைந்த பேராசிரியர் அன்பழகன் திமுகவிற்கு எப்போதெல்லாம் சோதனை வந்தாலும் அப்போது திமுகவுக்கு துணையாக இருந்தவர் பேராசிரியர். திமுகவில் இருந்து இ. வி கே சம்பத் விலகிய போது அறிஞர் அண்ணாவுக்கு ஆதரவாக இருந்தவர். அதே போல் எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோர் திமுகலிருந்து விலகிய போது கலைஞருக்கு ஆதரவாக இருந்தவர்.  இப்படி திமுகவுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் திமுகவிற்கு பக்க பலமாகவும், ஆதரவாகவும் விளங்கியவர் பேராசிரியர். 


அவரின் நூற்றாண்டு விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திமுக மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நியமித்த பிறகு திமுக மேற்கு மாவட்டத்தில்  உயிரோட்டமாக இன்றைக்கு உருவாகி இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் கண்ணியமான அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். அதை நமது முதல்வர் தளபதி அவர்கள் பலமுறை பாராட்டி பேசி இருக்கிறார்கள். மிசா சட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழகத்தில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். 


கலைஞர் வீட்டில் முரசொலி மாறன் அவர்களும் தளபதி மு க ஸ்டாலின் அவர்களும்  கைது செய்யப்பட்டனர். அப்பொழுது தளபதி மு.க.ஸ்டாலினுக்கு திருமணம் ஆகி நான்கு மாதம் தான் ஆகியிருந்தது. எமர்ஜென்சி காலத்தில் திமுக பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி போதும், திமுக என்ற பெயரை மாற்றக்கூடாது என்பதில் பேராசிரியர் உறுதியாக இருந்தார். அதனால்தான் இன்றைக்கு வரை திமுக என்ற பெயரும் கருப்பு சிவப்பு கொடியும் நமக்கு கிடைத்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா சென்னை வந்தால் தங்குவதற்கு சொந்தமாக வீடு இல்லை. அந்த காலத்தில் பேராசிரியர் வீட்டில் தான் தங்கி இருப்பார். அதனால்தான் அவர் மறைந்த பிறகு மெரினா கடற்கரையில் நினைவிடம்  அமைக்கப்பட்டது. அண்ணாவின் பக்கத்தில் என்னையும் அடக்க செய்ய வேண்டும் என கலைஞர் ஒரு முறை என்னிடம் சொன்னார். 


அதனால்தான் கலைஞர் மறைந்த பிறகு அவருடைய 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கும் 5 முறை தமிழக முதல்வராக இருந்ததற்கும் அடையாளமாகவும் அண்ணாவின் பக்கத்தில் அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடியாரை சந்தித்து கேட்டோம். ஆனால் மனசாட்சி இல்லாமல் இடம் கொடுக்க மறுத்து விட்டார். அதை தொடர்ந்து நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து, நீதிமான்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடலை அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்கள். ஸ்டாலின் இன்னும் 50 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்று கலைஞரிடம் நேரிடையாக பேராசிரியர் சொன்னார். அதே போல் தான் முதலமைச்சர் ஸ்டாலினும் திமுக கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். 


அதேபோல் அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுக வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கல்லை காட்டி சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அதனால் தான் திமுக அமோக வெற்றி பெற்றது. இனி திமுகவுக்கு இறங்கும் முகம் இல்லை ஏறு முகம் தான். இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுக அனைத்திலும் வெற்றி பெறும் அதற்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் வரும் பாடுபட வேண்டும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிச்சாமி தப்பிக்க முடியாது. திமுக வழக்கு போட்டு யாரும் தப்பித்த வரலாறு கிடையாது என்றார்.


கூட்டத்தில் மாநில தீர்மானக் குழு செயலாளர் கீரை விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சத்யமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சென்னகிருஷ்ணன், சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் சையத், முர்த்துஜா, லட்சுமணன், வாசுதேவன், தேவேந்திரன், கலைவாணி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், செங்கண்ணன், மாது, சேட்டு, நெப்போலியன், சிவப்பிரகாசம், சந்திரமோகன், சக்திவேல், ரத்தினவேல், சௌந்தரராசு, முத்துக்குமார், சரவணன், பேரூர் செயலாளர் முரளி, வெங்கடேசன், மோகன், முல்லை ரவி, கௌதமன், ஜெயச்சந்ததிரன், பேரூராட்சி தலைவர்கள் மாரண்டஅள்ளி வெங்கடேசன், கம்பைநல்லூர் வடமலை முருகன், விவசாய அணி குமார், மாரியப்பன், டாக்டர் பிரபு, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் காரிமங்கலம் கழக செயலாளர் சீனிவாசன் நன்றி உரையாற்றினார்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad