அட்மா திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் - பயறு வகைப் பயிர்களில் வரப்புப் பயிர் சாகுபடி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 டிசம்பர், 2022

அட்மா திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் - பயறு வகைப் பயிர்களில் வரப்புப் பயிர் சாகுபடி.


பாலக்கோடு வட்டாரம், காட்டனஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் செய்த திரு. பிரபாகரன் விவசாயி அவர்களின் செயல்விளக்கத் திடலை மேற்பார்வையிடப்பட்டது. இதில் விவசாயி அவர்கள் உளுந்து பயறு வகைப் பயிரினை 2 ஏக்கர் நெற்பயிரில் வரப்புப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவ்வாறு வரப்புப் பயிர் சாகுபடி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

இவ்வாறு சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம், நெற் பயிருக்கு பூச்சிகளால் ஏற்படும் தாக்கம் குறையும், வரப்புகளில் களை கட்டுப்பாடு ஏற்படும் என்று விளக்கமளித்தார். இதில் விவசாயி அவர்கள் அப்பகுதியில் கலந்து கொண்ட மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தார்.  அட்மா திட்ட அலுவலர்கள் திருமதி. தமிழ்ச்செல்வி மற்றும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விவசாயிகளுக்கு இவ்வாறு வளர்ப்பு பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தினை கூறினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad