தர்மபுரியில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 டிசம்பர், 2022

தர்மபுரியில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு.


தர்மபுரியில் தந்தை பெரியார் 49-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


தி.மு.க. சார்பில் அஞ்சலி: தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள்  எம்.பி. எம்.ஜி. சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, ராஜா, குமார், ரஹீம், காசிநாதன், வக்கீல் அசோக் குமார், நகர நிர்வாகிகள் அழகு, முல்லைவேந்தன், சம்பந்தம், சுருளிராஜன், அன்பழகன், கோமளவல்லி ரவி, கனகராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வெங்கடசமுத்திரத்தில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி பழனியப்பன் தலைமை தாங்கி பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்சித்தார்த்தன், நிர்வாகி ராஜவேங்கன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருணா இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய  செயலாளர் ராசுதமிழ்ச்செல்வன், பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, துணைத்தலைவர் ரவி, ஊராட்சி தலைவர் மலர் மாரப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கவுதமன், நிர்வாகிகள் தங்கதுரை, பிரபு, பாரதி மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


அ.தி.மு.க.- தே.மு.தி.க: தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம் பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், செந்தில்குமார், நீலாபுரம் செல்வம், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி தகடூர் விஜயன், மோகன், கோவிந்தசாமி, லட்சுமணன், நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், சுரேஷ், அறிவாளி, கூட்டுறவு சங்கத் தலைவர் அங்கு ராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, நாகராஜன், மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தர்மபுரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட  அவைத்தலைவர் தங்கவேல்,ஒன்றிய செயலாளர்கள் சரவணன், விக்னேஷ் குமார், ரங்கநாதன், விஜயகாந்த், ரமேஷ் நகர செயலாளர் தேவ தேவன், நகர பொருளாளர் முருகன், மகளிர் அணி துணை செயலாளர் ரதி, நிர்வாகி சுதா, கடத்தூர் நகர செயலாளர் எஸ்சேந்திரன், நகர அவைத் தலைவர் சிவக்குமார் நகர துணை செயலாளர் விஜய் மணி  மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


விடுதலை சிறுத்தைகள்-தி.க. : தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், மாநில பொருப்பாளர்கள் ராமன், கிள்ளிவளவன், கப்பல் செந்தில்குமார், அம்பேத்வளவன், தகடூர்கரிகாலன், ஒன்றிய செயலாளர்கள் பொன் சுரேஷ், சந்தானமூர்த்தி, முரளி, நகர செயலாளர் ராமதுரை, நகர நிர்வாகிகள் ஆறுமுகப்பாண்டி, நல்லைசீனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.


தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


இதில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கதிர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கதிர், வாசகர் வட்ட தலைவர் சின்னராஜ், வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, நிர்வாகிகள்  சுரேஷ், சண்முகம், சஞ்சீவி, சரண்யா, மீனா, ஜீவிதா, அருணா, மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad