எனது உயிர் மூச்சு உள்ளவரை அவருக்காக இதே போல் நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து உண்ணாமல் விரதம் இருப்போம். எனது தகப்பனார் குடும்பம் தீவிர திமுக விசுவாசமிக்கது. அதனாலேயே எனக்கும் எனது சகோதரர்களுக்கும் திமுக தலைவர்களின் பெயர்களையே எனது தகப்பனார் வைத்தார். ஆனால் 1977ல் எம் ஜி ஆரை கட்சியை விட்டு நீக்கும்போது அவரின் மீது இருந்த தீராத விசுவாசத்தால் அவர் ஆரம்பித்த அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்தேன். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான் அண்ணா தொழிற்சங்கத்திலும் பொறுப்பிலிருந்து தீவிரமாக கட்சிக்காக உழைத்துள்ளேன்.

இந்நிலையில் 1987 டிசம்பர் 24ஆம் தேதி எனது தலைவர் இறந்ததை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே அவரை நானும் எங்கள் குடும்பத்தாரும் நினைத்து வருகிறோம். அதனால் அவர் இறந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் நானும் எங்கள் குடும்பத்தாரும் உண்ணாவிரதம் இருந்து, மாலை அவருக்கு படையல் இட்ட பிறகே எங்கள் விரதத்தை முடித்து அவருக்கு மரியாதை செய்து வருகிறோம். இது கடந்த 35 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இனிமேலும் எனது உயிர் இருக்கும் வரை மௌன விரதம் மற்றும் உண்ணாமல் விரதம் இருப்பேன் என்று கூறினார்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக