தருமபுரி குண்டலப்பட்டி மற்றும் பெரியாம்பட்டியில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் உள்ள மனநலம் பாதித்த நபர்களுக்கு பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மை தருமபுரி அமைப்பு மற்றும் தியா பல் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகாமிற்கு தியா மருத்துவமனை பல் மருத்துவர் திருமதி.உத்ரா மற்றும் மருத்துவ குழுவினர் மனநலம் பாதித்த நபர்களின் பல்களை சரிபார்த்து மருந்துகளை வழங்கினர்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக மதிப்புறு முனைவர் சதீஸ்குமார் ராஜா, மருத்துவர் முஹம்மத் ஜாபர், விஜயகாந்த், அருணாசலம், ஜலபதிராஜா ஆகியோர் முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக