இதுவரை முகவரித்துறை சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தான் நடைபெற்று வந்தது. முதல் முறையாக நேற்று அரூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற டிஆர்ஓ அனிதா நில பிரச்சனை தொடர்பான அனைத்து புகார் மனுக்களை பெற்று பிரச்சனைக்குரிய இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சட்ட ரீதியாக தீர்த்து வைக்கப்படும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இதுபோன்ற முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை நடைபெற்று வந்த போது அனைத்து அதிகாரிகள், மற்றும் புகர்தாரர்கள் அதிக நேரம் பயணம் செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
இதனால் அவர்களது ஒரு நாள் பணியினை இழந்து வந்தனர். இந்நிலையில் அரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முதல் முறையாக இந்த முகாம் நடைபெற்றதால் புகார்தார்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் தருமபுரிக்கு சொல்லுவது தவிர்க்கப்பட்டதால் அவர்களின் அடுத்த பணியை தொடர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என விஏஓ சங்க தலைவர் ஏழுமலை, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக