குண்டும் குழியுமாக காணப்பட்ட முக்கிய சாலையை சீரமைத்த பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

குண்டும் குழியுமாக காணப்பட்ட முக்கிய சாலையை சீரமைத்த பொதுமக்கள்.


அரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தீர்த்தமலை சாலையின் இணைப்பு சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலை வழியாக நூற்றுக்கு மேற்பட்ட  கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொதுமக்கள் கார், பைக்கிலும்,  டவுன் பஞ்சாயத்தில் உள்ளவர்களும் தினந்தோறும் சிரமப்பட்டு  பயன்படுத்தி வருகின்றனர்.


குண்டும், குழியுமாக காணப்படும் இந்த முக்கிய சாலையை சீரமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டமும் நடத்தியுள்ளது.  பொதுமக்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இந்த சாலையில் தான் தினந்தோறும் எம்எல்ஏ சம்பத்குமார்,  தாசில்தார், ஆர்டிஓ,  அரசு அலுவலர்கள், டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4,5,6,7 வது வார்டு உறுப்பினர்களும் சில சமயங்களில் மாவட்ட கலெக்டரும் வாகனத்தில் பயணித்து செல்கின்றனர். 


அம்பேத்கர் நகர் வழியாக செல்லும் இந்த முக்கிய சாலையை அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தற்காலிகமாக மண் கொட்டி சீர்படுத்தி உள்ளனர். தரமான நிரந்தர தார் சாலை அமைத்துக் கொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  அனைத்து தரப்பு பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad