தீர்த்தமலை பாபா அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

தீர்த்தமலை பாபா அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்.


அரூர் திருவிக நகரில் தனியார் அரங்கில் தீர்த்தமலை பாபா அறக்கட்டளை சார்பாக பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கினர்.


அரூர் திருவிக நகரில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தீர்த்தமலை பாபா அறக்கட்டளை துவங்கி இரண்டாம் ஆண்டு விழா அறக்கட்டளை நிறுவனர் மகாலிங்கம் தலைமையில் பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 10,12 ஆம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நினைவு பரிசு, மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பல்வேறு கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி, சேலை ஆதரவற்றோருக்கு குளிர் காலத்திற்கு பயன்படும் வகையில் போர்வை வழங்கப்பட்டது. 


இந்தக் நிகழ்ச்சியில் பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆற்றிய தொண்டுகளை பற்றி விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, ஆன்மீக சிந்தனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad