தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா அவர்கள். தலைமையில் வாஜ்பாய் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொருளாதார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி, பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னாள் நகர துணைத் தலைவர் ராமரு , நிர்வாகிகள் சண்முகம், முருகன், தக்காளி சீனி, தண்டபாணி, மாரியப்பன், கலை கொண்டான் மற்றும் தக்காளி கூலிதொழிலாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு வாஜ்பாய் உருவ படத்திற்க்கு மலர் தூவி, இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக