மின்வாரியம் தனியார் மயமாக்கும் முயற்ச்சியை கைவிடவலியுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மின்வாரியம் தனியார் மயமாக்கும் முயற்ச்சியை கைவிடவலியுறுத்தல்.


தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் தருமபுரி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் தருமபுரி சந்திரா மாஹாலில் நடைபெற்றது. திட்டதலைவர் அருள் நாதன் தலைமை வகித்தார்.


திட்டசெயலாளர் எஸ்.கோகுல்தாஸ் வரவேற்றார். மத்திய அலுவலக செயற்பொறியாளர் மாதேஸ்வரன், தருமபுரி கோட்ட தலைவர் வாசு, லோகநாதன், திட்ட பொருளாளர் அழகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில தலைவர் டி.கே.பவர் ஜெகநாதன்,மாநில அமைப்பு செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் சிறப்புறையாற்றினர். சங்கத்தின் மாநில தலைவர்கள் பலர் ஜெகநாதன் நாராயணமூர்த்தி ஆகியோரை ஏஐசிசிடியு மாநிலத்தலைவர் சி.முருகன் தொழிலாளர் பொறியாளர் ஐய்க்கிய சங்க திட்ட தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மரியாதை நிமிர்ந்தாள் சந்தித்து சால்வை அணிவித்து கொளரவித்தனர்.

 

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1,12:2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான போசசுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். அவுட்சோர்சிங் என்ற பெயரால் மின்வாரியம் தனியார் மயமாவதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரியம் மக்கள் நிறுவனமான  மின்வாரியம் பாதுகாக்கப்படவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.பகுதிநேர பணியாளர்களை நிரந்தபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad