தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கபடி கைப்பந்து 100, 200மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் கோ கோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 150க்கும் மேலான இளைஞர்கள் மற்றும் மகளிர் இவ்விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளின் நடுவர்களாக இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேவேந்திரன் எம். தொட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கருணாநிதி ஆகியோர் பணியாற்றினர்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் அதியமான் கோட்டை ஊராட்சி தலைவர் சார்பில் அவர் கணவர் முனிராஜ், அதியமான் கோட்டை திருவள்ளுவர் இளைஞர் மன்ற தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக