அரசு பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

அரசு பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  அரசு மேல்நிலைப் பள்ளி நத்தமேடு ஆகிய இரண்டு பள்ளிகளும் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24. 12. 2012 முதல் 30. 12 2012 வரை நடைபெற உள்ளது இவ்விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. சங்கர் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவி திருமதி சாந்தி புஷ்பராஜ் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.


விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சின்ராஜ்,இடும்பன், மற்றும் தர்மலிங்கம் பள்ளி மேலாண்மை குழு குழு தலைவர்கள் திருமதி மகேஸ்வரி திருமதி பரிமளா மற்றும் தலைமை ஆசிரியர்கள்  திரு மணி,திரு பாரதி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ் தென்றல் அனைவரையும் வரவேற்று பேசினார் இம் முகாமின் போது பள்ளி வளாகத் தூய்மை பல்வேறு விதமான ஆளுமைத் திறன் பயிற்சிகள், கருத்தரங்குகள், பல்வேறு விதமான விழிப்புணர்வு ஊர்வலங்கள் மழைநீர் சேகரிப்பு டெங்கு, நெகிழி ஒழிப்பு பேரணி குழந்தைத் தொழிலாளர், இளம் வயது திருமணங்கள், போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் இந்நிகழ்வில் கல்வியாளர் திரு நேதாஜி அய்யா, ஆசிரியர் சேகர் கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி நத்தமேடு நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு பா. செந்தில் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள். 


- செய்தியாளர் எஸ் நந்தகுமார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad